இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை, தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம் , குறிப்பாக, நாகை, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் நடவடிக்கை தொடர் கதையாகி வருகிறது.
இது குறித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நாகை மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடிப் படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை தேவை என அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…