நாகர்கோவிலில் உள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், மதுரை அருகே ஒரு பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வேனில் சென்றுள்ளனர். நடுவழியில் உணவு அருந்துவதற்கு இறங்கியபோது, மாணவ, மாணவிகள், ஓ சொல்றியா மாமா ஓ ஓ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.
அப்போது அவர்களுடன் ஆசிரியை ஒருவரும் சேர்ந்து கொண்டு நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோவில் அவர், மாணவர் ஒருவரின் கையைப்பிடித்துக் கொண்டு நடனம் ஆடுவது போன்று உள்ளது. வெளியூருக்குச் சென்ற இடத்தில், நடுரோட்டில் மாணவர்களுடன் ஆசிரியை நடனமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…