கொல்லிமலை வல்வில் ஓரி விழவையொட்டி நாமக்கல் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையை தலைமையிடமாகக் கொண்டு கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஓரி மன்னன் ஆட்சி செய்து வந்தார். வில் வித்தையில் சிறந்து விளங்கிய ஓரி மன்னனுக்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம் 17, 18 ஆகிய இரு தினங்கள் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான விழா ஆக., 2, 3-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்திற்கு மட்டும் ஆக்ஸ்டு 3ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கொல்லிமலை செம்மேடு, சோளக்காடு, செங்கரையில் உள்ள டாஸ்மாக் கடைகளை 1-3 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூடவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே சுகந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி ஆகஸ்ட் 3ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…