சாலையோரம் அமர்ந்து பேசிய 4 பெண்கள் மீது ஆட்டோ மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அருகே முடவன்குளம்- சீலாத்திகுளம் சாலையோரத்தில் நேற்று இரவு அப்பகுதியில் வசிக்கும் 4 பெண்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோ ஒன்று எதிர்பாராதவிதமாக 4 பெண்கள் மீதும் மோதியது. இதில் பிரேமா என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ மோதி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…