தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியான இரங்கல் அறிக்கையில், பிரபல பேச்சாளரும், முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவருமான 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் மறைவு வருத்தமளிக்கிறது. விசிக விருது விழாவில் என்னிடம் வாஞ்சையொழுக அன்பு பாராட்டி பேசியதை நினைந்து நெஞ்சம் நெகிழ்கிறேன்
என்றும், நெல்லை கண்ணனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், தமிழுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…