தீவிரவாதியிடம் விசாரனை செய்ய இந்தியாவின் உளவு அமைப்புகள் ரஷ்யா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவின் முக்கிய அளும் தலைவர்களை கொல்ல திட்டமிட்டிருந்த முக்கிய தீவிரவாதியை தாங்கள் கைது செய்துள்ளதாக ரஷ்யா உளவுத்துறை தெரிவித்தது. இந்நிலையில், தீவிரவாத செயல்களை கண்காணிக்கும் தேசிய புலானாய்வு அமைப்பான NIA மற்றும் இந்தியாவின் உள்நாட்டு உளவு அமைப்பான IB ஆகிய அமைப்புகள், ரஷ்யாவின் கைதாகியுள்ள ISIS பயங்கரவாதியிடம் இருந்து மேலதிக தகவல்கள் பெற ரஷ்யா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ராஜஸ்தான் தையல்காரர் கொடூரமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்பட்ட விதம் தீவிரவாதிகளின் பாணியில் உள்ளதாக இந்திய உளவுத்துறை சந்தேகம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…