Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கொரோனா வேகமெடுப்பது இப்படி தான்..? அமைச்சர் விளக்கம்

Bala June 01, 2022 & 15:23 [IST]
கொரோனா வேகமெடுப்பது இப்படி தான்..? அமைச்சர் விளக்கம்Representative Image.

வட இந்திய மாணவர்கள் மூலம் தமிழகத்தில் கொரோனா பரவுவதாக  சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 98பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,55,474 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், உயிரிழப்பு எதுவும் ஏற்படாததால் இறப்பு அதிகரிக்கவில்லை என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனைதொடர்ந்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,745 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பய்ட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளதால் ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதாரத்துரை செயலாளர் கடிதம் அனுப்பிருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்; வட இந்திய மாணவர்களால் தான் கேளம்பாக்கம் விஐடி கல்லூரி மற்றும் சத்யசாய் கல்லூரி மாணவர்கள் விடுதிகள் மற்றும் வகுப்புகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக கூறினார். மேலும் சில வட மாநிலங்களில் கொரோனா தொற்று இன்னும் குறையவில்லை என்றும் மக்கள் பாதுகாப்பாக இடுக்கும் படியும் அறிவிறுத்தினார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்