நுபுர் சர்மாவுக்கு அச்சுறுத்தலா? அல்லது அவரால் நாட்டுக்கு அச்சுறுத்தலா? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முகமது நபி குறித்த கருத்தால் பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி நுபுர் சர்மா மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், நுபுர் சர்மா நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார் ; உதய்பூரில் டெய்லர் கொல்லப்பட்டது நுபுர் சர்மாவின் பேச்சால்தான் என்றும், டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு கட்சியின் செய்தித்தொடர்பாளர் என்றால், நீங்கள் இதுபோல் எது வேண்டுமானாலும் சொல்வதற்கு லைசன்ஸ் இல்லை நாட்டில் தற்போது நடப்பதற்கு இந்த பெண்மணியே பொறுப்பு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முகமது நபி குறித்த கருத்தால் பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…