Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஸ்டெர்லைட் ஆலையை வேகமா திறங்க:- ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட இந்து மக்கள் கட்சியினர்...!

Bala July 12, 2022 & 14:26 [IST]
ஸ்டெர்லைட் ஆலையை வேகமா திறங்க:- ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட இந்து மக்கள் கட்சியினர்...!Representative Image.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர், மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

கடந்த கால அதிமுக ஆட்சியில் நச்சுத்தன்மை கொண்ட ஸ்டெர்லை ஆலையை மூட வேண்டும் என தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அது வன்முறையாக மாறி துப்பாக்கிச்சூடு வரை சென்றது. இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான இந்து மக்கள் கட்சியினர் மற்றும் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 41 பேரை கைது செய்த காவல்துறையினர். பின்னர் அவர்களை விடுவித்தது.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள், ஸ்டெர்லைட் ஆலை மூடலாம், மாவட்டத்தின் தொழில் வளர்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தாமதமின்றி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்