விருதுநகர் அருகே பூஜை செய்வதாக கூறி 70 சவரன் நகை மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழனிக்குமர் என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டவரிடம், உடல்நிலையை சரிசெய்ய நகைகளை வைத்து பூஜை செய்தால் சரியாகி விடும் எனக்கூறி, 70 சவரன் நகையை மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாராணை மேற்கொண்ட காவல்துறையினர், மோசடியில் ஈடுபட்ட பழனிக்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 70 சவரன் நகையை பூஜை செய்வதாக மோசடி செய்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…