சென்னையில், சசிகலா ஆதரவாளர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சந்திப்பு நடத்தியுள்ளார்.
அதிமுகவிற்கு ஒற்றை தலைமை கோரி, ஈபிஎஸ் தரப்பினர், மற்றும் ஒபிஎஸ் தரப்பினர் சமீபத்தில் மோதிக்கொண்டதாக செய்திகள் வெளிவந்தன. மேலும், அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், அது தொடர்பாக எந்த கடிதமும் வரவில்லை என ஈபிஎஸ் தரப்பு கூறியது. மேலும், அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பிரிவு தமிழக டி.ஜி.பி.யிடம் மனு அளித்துள்ளதால் பரபரப்பு அதிகரித்து.
இந்நிலையில், சென்னையில், சசிகலா ஆதரவாளர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சந்திப்பு நடத்தியுள்ளார். மேலும், சசிகலாவின் பாதையில் பயணிக்க தயாராக இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளதாக சசிகலா ஆதரவாளர்கள் பேட்டியளித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…