அதிமுக அலுவலக சுவரில் வரையப்பட்டிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் மற்றும் பெயர் அழிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை வானகரத்தில் நேற்று(23-ம் தேதி) பல்வேறு களேபரங்களுடன் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்தது. இதில் அனைத்து தீர்மாணங்களும் நிராகரிக்கப்டுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அதிமுகவின் புதிய அவைத்தலைவராக தமிழ் உசேன் நியமனம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களிலும், நெடுஞ்சாலை தடுப்பு கட்டைகளிலும் இடம் பெற்றிருந்த ஓபிஎஸ் பெயர், புகைப்படங்கள் அழிக்கப்பட்டன. சி.வி. சண்முகத்தின் உத்தரவின்பேரில் இவை அழிக்கப்பட்டதாக அதிமுக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுகவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையிலும் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபடாத நிலையில், அவருடைய படம் மற்றும் பெயரை அழிப்பது அக்கட்சியின் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…