சாதி மதம், இல்லை என சான்றிதழ் வழங்கக்கோரி விண்ணப்பித்தரவ்ருக்கு இரண்டு வாரங்களில் சான்றிதழ்களை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காதல் திருமணம் முடித்த தான், தனது மகனை பள்ளியில் சேர்க்க உள்ளதால் ஜாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை விரைந்து வழங்க அம்பத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிட கோரி அண்ணா நகரை சேர்ந்த மனோஜ் (தந்தை) மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, 2 வாரங்களில் சான்று வழங்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்டதாக தாசில்தார் அளித்த கடிதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…