அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழன்மாதேவி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரன். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து சில மாதங்கள் ஆன நிலையில் மகன் கார்த்தி திருவள்ளூரில் உள்ள நிறுவனத்தில் சுமார் ஒரு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்றபோது எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த லாரியில் மோதி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மூளையில் சிதைவு ஏற்பட்டதாக மருத்துவர் கூறியுள்ளனர்.
அதை தொடர்ந்து பெற்றோர்கள் தங்களுக்கு ஆதரவாக இருந்த ஒரு மகனையும் இழந்து விட்டோமே என கண்ணீர் மல்க அழுது புலம்பிய நிலையில் உடல் தானம் செய்ய முன்வந்தனர்.
பெற்றோர் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதனையடுத்து அவரது இதயம், கண்கள், நுரையீரல் உள்ளிட்ட 9 உறுப்புகள் மியாட் மருத்துவமனை மூலம் தானமாக வழங்கப்பட்டது. பின்னர் அரசு மருத்துவரை கொண்டு பிரேத
பரிசோதனை முடித்து பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. சோழமாதேவி கிராமத்திற்கு கொண்டுவரப்பட்ட கார்த்தி உடலுக்கு
கிராம மக்களின் அஞ்சலிக்கு பிறகு சொந்த ஊரில்
கார்த்தி உடல் எரியூட்டப்பட்டது. மகனை விபத்தில் இழந்து தவித்தாலும் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் தொடர்ந்து கார்த்தி உயிரோடு இருப்பதா கவே தாங்கள் கருதுவதாக கூறி கதறி அழுதது காண்பவர்களை கண்கலங்க வைத்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…