முகத்தை பார்த்து சாதி கண்டுபிடிக்கும் சென்னை பச்சையப்பா கல்லூரி பேராசிரியை அனுராதா சஸ்பென்ஸ் செய்யப்பட்டுள்ளார்.
பேராசிரியை அனுராதா கல்லூரி மாணவர் ஒருவரிடம், "நீ எந்த சாதியை சேர்ந்தவன் என்பது உன் மூஞ்சியை வைத்தே என்னால் கண்டு பிடிக்க முடியும். யார் என்ன சாதி என்பது அவரவர் முகத்திலேயே எழுதி வைத்திருக்கிறது." என்று கூறியதாக பரபரப்பு குற்றச்சாட்டு வெளியானது.
இதையடுத்து பேராசிரியை அனுராதா மீது விசாரணை நடத்தப்பட்டு தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணையின்போது கல்லூரி நிர்வாகத்திற்கு குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரிய வந்ததை அடுத்து, கல்லூரி நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…