அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டச் செயலாளர்கள் மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார்.
குஜராத்தில் உள்ள ஏக்தா நகரில் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் இரண்டு நாள் மாநாட்டை நடத்தியது. மாநாட்டின் நோக்கம், இந்திய சட்ட மற்றும் நீதி அமைப்பு தொடர்பான பிரச்சனைகளை விவாதிக்க கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு பொதுவான மன்றத்தை வழங்குவதாகும்.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சட்ட அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் மூலம் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தங்களின் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய யோசனைகளைப் பரிமாறிக்கொள்ளவும், பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவும் முடியும்.
மாநாடு, விரைவான மற்றும் செலவு குறைந்த நீதிக்கான நடுவர் மற்றும் மத்தியஸ்தம் போன்ற மாற்று தகராறு தீர்வு வழிமுறைகள் போன்ற தலைப்புகளைச் சுற்றியுள்ள விவாதங்களைக் கண்டது. ஒட்டுமொத்த சட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், வழக்கற்றுப் போன சட்டங்களை அகற்றி நீதிக்கான அணுகலை மேம்படுத்துதல் போன்றவையும் இதில் விவாதிக்கப்பட்டது.
நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பது மற்றும் விரைந்து தீர்ப்பதை உறுதி செய்தல், சிறந்த மத்திய-மாநில ஒருங்கிணைப்பு மற்றும் மாநில சட்ட அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான மாநில மசோதாக்கள் தொடர்பான திட்டங்களில் சீரான தன்மையை கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதில் வீடியோ கான்பெரன்ஸ் முறையில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் பெரும் இடையூறாக இருப்பதாகத் தெறித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…