சென்னையை அடுத்த பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பெண்கள் கண்ணீருடன் போராடிய சம்பவம் நெஞ்சை உருக வைத்துள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு அதிக இடவசதி இல்லாத காரணத்தால், சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பரந்தூர் பகுதி விவசாயம் செழித்தோங்கும் பகுதியாக உள்ள சூழலில், அங்குள்ள மக்கள் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, விவசாயத்தை அழித்து விமான நிலையம் அமைக்க வேண்டுமா என பெண்கள் கண்ணீருடன் சாலையை மறித்து போராட்டம் நடத்தியது பார்ப்போரை உருக வைத்தது. இதற்கிடையே போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், நாளை நிலம் கையகப்படுத்துவது தொடர்பான கூட்டம் நடக்க உள்ள நிலையில், அங்கு வந்து குறைகளை கூறுமாறு சமாதானப்படுத்தி போராட்டத்தைக் கலைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…