கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டிய நிலையில், மாணவிக்கு நீதி கேட்டு சிலர் கும்பலாக வன்முறையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சிசிடிவி மற்றும் வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து, கலவரம் தொடர்பாக 300க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சமூக வளைத்தளங்களில் தவறாக பதிவிட்டதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…