உக்ரைனில் குண்டுவெடித்த பள்ளிக்கு வெளியே இளம்பெண் ஒருவர் பேஷன் சோ போல் நடந்து வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உக்ரைன் - ரஷ்யா இடையே நடந்து வரும் போர் 100 வது நாளை கடந்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல தடைகளை விதித்துள்ள நிலையில், அதே ஆக்ரோஷத்துடன் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உக்ரைன் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ஷெல் தாக்குதல்களையும் ரஷ்யா நடத்தி வருகிறது. இதனால் ஆயுதங்களை உக்ரைன் பள்ளி மற்று மருத்துவமனைகளில் பதுக்கி வருவதாக ரஷ்யா உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து பள்ளிகள் மீது ரஷ்ய படைகள் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இடிந்த பள்ளியின் அருகே கவுன் அணிந்த உக்ரைன் இளம்பெண் ஒருவர் பேஷன் சோ போல் நடந்து வரும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கு ரஷ்யர்கள் பள்ளிகளை கூட அழித்து வருவதாக ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…