அக்னிபாத் போராட்டம் காரணமாக முப்படை தளபதிகளை பிரதமர் மோடி இன்று சந்திக்கிறார்.
அக்னிபாத் திட்டம் தொடர்பாக , தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளின் தளபதிகளையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 21) சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். முப்படைத் தளபதிகளும் இன்று தனித்தனியாக பிரதமரை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பின் போது, அக்னிபாத் போராட்டம், இந்த திட்டத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் வெடித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…