Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தனது பள்ளி ஆசிரியரை சந்தித்து நன்றி கூறிய பிரதமர் மோடி

Bala June 10, 2022 & 19:58 [IST]
தனது பள்ளி ஆசிரியரை சந்தித்து நன்றி கூறிய பிரதமர் மோடிRepresentative Image.

பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக சொந்த மாநிலமான குஜராத் சென்றுள்ளார். இந்நிலையில், நவ்சாரியில் உள்ள வாட்நகரை சேர்ந்த தனது முன்னாள் பள்ளி ஆசிரியரை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது அவருக்கு பிரதமர் மோடி இருகரம் கூப்பி நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். பிரதமரும், அவரது ஆசிரியரும் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், குஜராத் கௌரவ் அபியான்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, நவ்சாரியில் உள்ள பழங்குடியினப் பகுதியான குத்வேலில் சுமார் 3,050 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதில் ஏழு திட்டங்களின் தொடக்க விழா, 12 திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழா மற்றும் 14 திட்டங்களின் பூமி பூஜை ஆகியவை அடங்கும். இந்தத் திட்டங்கள் பிராந்தியத்தில் நீர் விநியோகத்தை மேம்படுத்துவதற்கும், இணைப்பை அதிகரிப்பதற்கும், வாழ்க்கையின் எளிமையை மேம்படுத்துவதற்கும் உதவும்.

தபி, நவ்சாரி மற்றும் சூரத் மாவட்டங்களுக்கு 961 கோடி ரூபாய் மதிப்பிலான 13 நீர் வழங்கல் திட்டங்களுக்கான பூமி பூஜையையும் பிரதமர் செய்வார். நவ்சாரி மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியின் பூமி பூஜையையும் அவர் நிகழ்த்துவார், இது சுமார் 542 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளது, இது பிராந்திய மக்களுக்கு மலிவு மற்றும் தரமான மருத்துவ சேவையை வழங்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்