ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் 3 மாதங்களை கடந்து இன்னும் உக்கிரமாக நடைபெற்று வருகிறது இதில் உக்ரைனின் ராணுவ நிலைகளையும், ஐரோப்பிய நாடுகள் வழங்கும் ஆயுதங்களை குறிவைத்தும் ரஷ்யா துல்லிய தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் காரணமாக உலகம் முழுவதும் உணவு பஞ்சம் ஏற்ப்படும் அபாயம் உள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியதாக பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த உரையாடலில்,
விவசாயப் பொருட்கள், உரங்கள் மற்றும் மருந்துப் பொருட்களில் இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், உக்ரைன் விவகாரத்தில் ராஜாங்க ரீதியிலான நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…