Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மணிப்பூர் நிலச்சரிவு பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு...!

madhankumar July 01, 2022 & 15:15 [IST]
மணிப்பூர் நிலச்சரிவு பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு...!Representative Image.

மணிப்பூரில் ஏற்பட்ட கடுமையான மழை காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு நடந்த நிலச்சரிவில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அசாம், திரிபுராவில் பெய்த மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த மாநிலங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அசாமில் ஏற்பட்ட கடுமையான மழை வெள்ளதாக 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் மணிப்பூரிலும் கடுமையாக மழை பெய்துவருகிறது, இந்நிலையில் மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தின் துபூல் ரெயில் நிலையம் அருகே கனமழையால்  கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.  இந்நிலச்சரிவில் சிக்கி ஏற்கனவே 7 பேர் உயிரிழந்த நிலையில்,  இதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

இந்த நிலச்சரிவால் பாறைகள் சரிந்து இஜேய் ஆற்றின் குறுக்கே விழுந்ததால் ஆணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆணை உடைந்தான் நோனி மாவட்டத்தின் தாழ்வான பகுதிகள் மிகப்பெரிய சேதத்தை சந்திக்க நேரிடும் இதனால், அப்பகுதி மக்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில்  மணிப்பூர் முதலமைச்சர்  என். பிரேன் சிங் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ. 5.லட்சமும்,  காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என  அரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்