குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் ( 55 ) மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார்.
மூத்த பத்திரிகையாளரும் குமுதம் ஆசிரியருமான ப்ரியா கல்யாணராமன் சென்னையில் இன்று (ஜூன் 22) காலமானார். 55வது வயதான இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக குமுதம் இதழில் பணியாற்றி வந்தார். மேலும் ஆன்மீகம் தொடர்பாக அதிக கட்டுரைகளை எழுதியுள்ளார். இந்நிலையில் இவரது மறைவுக்கு பத்திரிகை துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவரது மறைவு குறித்து அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "குமுதம் வார இதழின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான திரு.பிரியா கல்யாணராமன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன் என பதிவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…