தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இந்த நிலையில் குற்றாலம் அருவிகளில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் மெயின் அருவியில் மட்டும் வெள்ளப்பெருக்கு குறையாததால் அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…