தமிழ்நாட்டில் இனி தண்டோரா போடுவதற்கு தடை என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
தலைமை செயலாளர் எழுதியுள்ள அந்த கடிதத்தில்; மக்களிம் முக்கிய செய்திகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊரில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும், அதைச் சமூக ஆர்வுலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப் படுவதையும் கண்டேன். அறிவியல் வளர்ந்து விட்டது, தொழில்நுட்பம் பெருகி விட்டது. இச்சூழலில் தண்டோரா போடுவது இன்னும் தொடரவேண்டிய தேவையில்லை.
ஒலி பெருக்கிகளை வாகனங்களில் கட்டிக்கொண்டு வலம் வரச் செய்வதன் மூலம் மூலை முடுக்குகளிலெல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும் எனவே தண்டோரா போடக் கடுமையான தடை விதிப்பது நல்லது.மீறி ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…