Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பள்ளி மாணவர்களுக்கு பறந்த எச்சரிக்கை..! கவனமா இருங்க மாணவர்களே…!

Gowthami Subramani October 05, 2022 & 12:55 [IST]
பள்ளி மாணவர்களுக்கு பறந்த எச்சரிக்கை..! கவனமா இருங்க மாணவர்களே…!Representative Image.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், முதல் பருவ தேர்வு மற்றும் காலாண்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலாண்டு விடுமுறையும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 13 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொள்ளிடம் ஆற்றில் குளித்த 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும், பல்வேறு சோகமான நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்து வருகிறது. இதனால், காலாண்டு விடுமுறையில் வீட்டில் இருக்கும் மாணவர்கள் ஆறு, குளங்களுக்குச் சென்று குளிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பெற்றோர்களுக்கும் குழந்தைகளை தனியாக விட வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதே போல, மாணவர்கள் செல்போனில் அதிக நேரத்தை செலவு செய்யாமல், புத்தக வாசிப்பு உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் தங்களது கவனத்தை ஈடுபடுத்தி நேரத்தை செலவிடுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்