தொடர் நஷ்டம் காரணமாக ஆந்திராஅவில் 400 தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தியேட்டர் கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து உரிமையாளர்கள் சென்று முறையிட்டதை அடுத்து மீண்டும் கட்டணம் உயர்த்திக்கொள்ள ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தியேட்டர்களில் வருகை வெகுவாக குறைந்துள்ளதாகவும், ஒரு நாளைக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையே வசூலாகிறது என்றும், ஆனால் தியேட்டரை பராமரிக்கவே ஒரு நாளைக்கு 5 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து தொடர் நஷ்டம் காரணமாக ஆந்திராவில் 400 தியேட்டர்கள் மூடப்படுவதாகவும், தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது வெளியிடப்படும் பெரும் நட்சத்திரங்களின் படங்களின் போது தியேட்டர்கள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…