Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2 நாட்களில் இந்தியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள்...!

Bala July 18, 2022 & 12:29 [IST]
2 நாட்களில்  இந்தியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள்...!Representative Image.

கடந்த 48 மணி நேரத்தில் 3 சர்வதேச விமானங்கள் இந்தியாவில் அவசரமாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விமான நிறுவனங்களின் மூன்று விமானங்கள் 48 மணி நேரத்தில் இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் அவசரமாக தரையிறங்கியுள்ளன, இதில், பல்வேறு விமானங்கள்,  தொழில்நுட்ப அவசரம் காரணமாக  தரையிறக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கோழிக்கோடு, சென்னை மற்றும் கொல்கத்தாவில் இந்த தரையிறக்கங்கள் செய்யப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின்  மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், சனிக்கிழமை வெளிநாட்டு ஆபரேட்டர்களை நாங்கள் இரண்டு அவசரமாக தரையிறக்கினோம். ஹைட்ராலிக் சிக்கல்கள் காரணமாக கொச்சினில் ஏர் அரேபியா மற்றும்  கொல்கத்தாவில் எத்தியோப்பியன் ஏர்லைன் விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான விசாரணைக்கு டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. மேலும், பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக தறையிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்