அதிபர் கோட்டாபய ராஜபக்ச மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதை அடுத்து இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கோத்தபய ராஜபக்சேவை உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி இலங்கை தலைநகர் கொழும்பில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் அதிபர் அலுவலத்திற்கு சென்று அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இதனைதொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இந்நிலையில், இலங்கையில் மீண்டும் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக இலங்கை பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையின் மேற்கு மாகாணம் முழுவதும், ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…