வடகிழக்கு பருவமழை வாட்டி வரும் நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு தினங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன், மழையும் தொடர்ந்து பெய்து வருவதால், இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதுச்சேரி கல்வியமைச்சர் நமச்சிவாயம் இன்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு நாளை, நாளை மறுநாள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும் மழை தொடர்ந்து வரும் நிலையில், அதிக மழைப்பொழிவு உள்ள மாவட்டங்களில் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…