மதுரையில் அம்மா உணவகத்தில் அனுமதிக்கப்படாத உணவுகளை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் மதுரையில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில், பூரி, வடை,ஆம்லேட் உள்ளிட்ட அனுமதிக்கப்படாத உணவுகள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து அந்த மகளிர் குழுவின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார், இதனைதொடர்ந்து, விரைவில் புதிய மகளிர் குழுவிற்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…