உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு பின்னர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்கவுள்ளதாக ரஷ்ய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் - ராஷ்யா இடையிலான போர் 3 மாதங்களை கடந்து இன்னும் உக்கிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஐரோப்பியா நடுகள் வழங்கும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்யா துல்லிய தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் படைகளும் அமெரிக்கா வழங்கியா நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி கப்பல்கள், கிரிமியா பகுதிகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா அதிபர் புடின் இந்த வாரம் ஆசியாவில் உள்ள இரண்டு முன்னாள் சோவியத் நாடுகளான தஜிகிஸ்தான் மற்றும் துருக்மெனிஸ்தான் செல்லவுள்ளதாகவும், பின்னர் மாஸ்கோ திரும்பும் அவர் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.
தஜிகிஸ்தானின் தலைநகர் துஷான்பேயில், ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளியான ஜனாதிபதி இமோமலி ரக்மோனை புதின் சந்திக்கவுள்ளார். முன்னாள் சோவியத் அரசின் நீண்ட காலம் ஆட்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அஷ்கபாத்தில், அஜர்பைஜான், கஜகஸ்தான், ஈரான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் உட்பட காஸ்பியன் நாடுகளின் உச்சிமாநாட்டில் புடின் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவிற்கு வெளியே புடினின் கடைசி பயணம் பிப்ரவரி தொடக்கத்தில் பெய்ஜிங்கிற்கு சென்றது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…