காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேற்று ஆஜரானார். அப்போது அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி இன்றும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இதைக் கண்டித்து சென்னையில் நேற்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கேஎஸ் அழகிரி தலைமையில் அக்கட்சியினர், நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அனுமதியின்றி கூடுதல் உள்பட 2 பிரிவுகளில் 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…