மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று பெய்த பேய் மழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வெப்ப அலைகளால் அவதிப்பட்டு வந்த மதுரை வாசிகளுக்கு திடீரென மழை பெய்ததால் மகிழ்சியடைந்துள்ளனர். மேலும் மழை காரணமாக இதமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் உசிலம்பட்டியில் நேற்று பெய்த கனமழை காரணமாக எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் உசிலம்பட்டியில், 23 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும் கரையான்பட்டி அருகே மின்னல் தாக்கி ஒரு மாடு ஒன்று உயிரிழந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…