Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஊமக்குத்தா குத்துறா சார்....முடியல போலீசாரிடம் கதறிய கணவன்...

Bala May 26, 2022 & 16:24 [IST]
ஊமக்குத்தா குத்துறா சார்....முடியல போலீசாரிடம் கதறிய கணவன்...Representative Image.

ராஜஸ்தான் மாநிலத்தில் தனது மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை என்றும் என்னால் அடி வாங்க முடியல சார் என காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியை சேர்ந்த அஜித் சிங் என்பவர், ஆசிரியாராக பணியாற்றி வருகிறார். இவர் சுமன் என்ற பெண்ணை ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்களின் ஆரம்ப கால திருமண வாழ்க்கை அமைதியாகவும், உல்லாசமாகவும் இருந்த நிலையில்,   காவல்துறையினரிடம் சென்றும், தன் மனைவியிடம் என்னால் அடி வாங்க முடியவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

சகோதரனின் பேச்சை கேட்டு என்னை வன்கொடுமை செய்வதாகவும், குச்சி, பாத்திரம், செருப்பு, மட்டை போன்ற கையில் கிடைப்பதை எல்லாம் ஆயுதமாக மாற்றி என்னை தாக்குவதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளையிம் அவர் காவல்நிலையத்தில் கொடுத்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.