இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெடித்த மக்கள் புரட்சி காரணமாக அதிபர், கோத்தபயா ராஜபக்சே ராஜினாம செய்தார். இதனையடுத்து காலியாகவுள்ள அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த ரகசிய தேர்தலில், 225 உறுப்பினர்களில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதனையடுத்து டலஸ் அழகப்பெரும – 82 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்தார். இதனையடுத்து இலங்கையின் 8வது அதிபராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்க உள்ளார். வரும் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை, இவர் இப்பதவியில் இருப்பார் என கூறப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து பேசிய ரணில் விக்கிரமசிங்க, பிளவுபட்டு செயலாற்றிய காலம் நிறைவடைந்து விட்டது என்றும், நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அனைத்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க தீவிர அமெரிக்கா ஆதரவாளர் என இலங்கை அரசியல் தலைவர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…