கடன் அன்பை முறிக்கும் என்ற கடைக்காரர் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்தில் ஒரு நபர் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் கடனாக உணவு வழங்குமாறு கேட்டுள்ளார். இதற்கு கடையின் உரிமையாளர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்ப்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாத முற்றிய நிலையில், கோபத்தின் உச்சத்திற்கே சென்ற மர்ம நபர் வீட்டிற்கு சென்று ஆசிட் எடுத்து வந்துள்ளார். பின்னர் கடை மீது ஆசிட்டை எறிந்ததில் 7 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.ஜேர்முண்டி காவல் நிலையத்திற்குட்பட்ட ஹரிபூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது,
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனைதொடர்ந்து கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…