இந்தியாவில் சகோதரி, சகோதர அன்பினை வெளிப்படுத்தும் விதமாக ரக்ஷா பந்தன் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடி குழந்தைகளுடன் ரக்சா பந்தன் கொண்டாடினார்.
இந்நிலையில், துப்புரவு பணியாளர்கள், பியூன்கள், தோட்டக்காரர்கள், டிரைவர்கள் உள்பட பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் அணைத்து ஊழியர்களின் குழந்தைகளுடன் ரக்ஷா பந்தனை சிறப்பாக பிரதமர் கொண்டாடினார்.
இதனையடுத்து, பிரதமர் அலுவலகம் சென்ற குழந்தைகள் மோடியின் கைகளில் ராக்கி கயிறு கட்டி அவரிடம் ஆசி பெற்றனர்.
மேலும், பிரதமருக்கு சிறுமிகள் ராக்கி கட்டும்போது எடுக்கப்பட்ட வீடியோவை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…