Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அரசு பள்ளியில் சேர்ந்தால் ரூ.1000 பரிசு

Bala June 10, 2022 & 18:59 [IST]
அரசு பள்ளியில் சேர்ந்தால் ரூ.1000 பரிசுRepresentative Image.

அரசுப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூபாய் 1000 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என்ற தலைமை ஆசிரியரின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது. 

கோவை சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள நாயக்கன்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை மொத்தம் 15 பேர் மட்டுமே படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக 2022-23ம் கல்வியாண்டில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 பரிசு வழங்கப்படும் என பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமணசாமி அறிவித்துள்ளார். மேலும், பள்ளியின் அமைதியான சூழலில் மரங்கள் நிறைந்த பரந்த விளையாட்டு மைதானம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இருப்பதாக கூறியும் அவர் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி வருகிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்