ஒரு குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் சங்கிலி மாவட்டத்தில் ஹைசால் என்ற பகுதியில் உள்ள வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இறந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். பின்னர் வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவர்கள் அனைவரும் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் பிரேத பரிசோதனை முடிவுக்கும் பின்னரே உண்மையான காரணம் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…