தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுக்காகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கேரளா, மும்பை, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குஜராத்தில் தொடர்மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனைதொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக உதகமண்டலம், கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். மழையால் பொதுமக்கள் வீடுகளிலையே முடங்கும் சூழல் ஏற்ப்பட்டுள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…