சென்னை மேற்கு மாம்பலத்தில் கலப்பட எண்ணெய் விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை மேற்கு மாம்பழத்தில் உள்ள கடை ஒன்றில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து கடைக்கு சென்ற அதிகாரிகள் ஆய்வு செய்ததில், எந்தஒரு உரிமமும் இல்லாமல் கடையில் ஆயில் கிடங்கு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதில் உள்ள ஆயிலை சோதனை செய்ததில் கலப்பட எண்ணெய் என தெரிய வந்தது.
இதனையடுத்து 4 ஆயிரம் லிட்டர் எண்ணெய்யை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கடைக்கு சீல் வைத்ததால், கடையின் உரிமையாளர் குமுறி, குமுறி அழுதுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…