மேட்டூர் அணை அருகே தேங்கி நிற்கும் உபரி நீர் பகுதியில் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி மீன் பிடிப்பதால் அணைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் மேட்டூர் அனைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனையடுத்து அணைக்கு நிரம்பியதால், விநாடிக்கு, அணைக்கு வரும் நீர் முழுவதும் 16வது - கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வந்தது.
நீர் வரத்து குறைந்ததால் 16வது கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ஆங்லாங்கே தண்னீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் தண்ணீரில், டன் கணக்கில் மீன்கள் காணப்படுகிறது. இந்த மீன்களை சமூக விரோதிகள் நாட்டு வெடிகுண்டு வீசிய பிடித்து வருவதால் அணைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் கூறி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…