திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி மாணவி சுமதி(19), விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த திருவேற்காடு மாதிராவேடு சாலையில் இயங்கி வரும் தனியார் மகளிர் நர்சிங் கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த சுமதி (19) என்ற மாணவி ஹாஸ்டலில் தங்கி இரண்டாம் ஆண்டு நர்சிங் பயின்று வந்துள்ளார்.
நேற்று காலை வகுப்பிற்கு சென்று விட்டு மதிய உணவிற்காக விடுதிக்கு வந்த அவர் தோழிகளை சாப்பிட செல்லுமாறு கூறிவிட்டு விடுதி அறைக்கு சென்றுவிட்டார். பின்னர் நீண்ட நேரம் கழித்தும் சுமதி வெளியே வராததால் சந்தேகமடைந்த தோழிகள் அறையின் கதவை தட்டியுள்ளனர்.
ஆனால் நீண்ட நேரமாகி கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்த போது சுமதி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு தோழிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனே சக மாணவிகள் கதவை உடைத்து உள்ளே சென்று சுமதியை மீட்டனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்ததுவிட்டார்.
இந்நிலையில் சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுமதியின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அனுப்பிவைத்தனர்.
மேலும் அவரது சுமதியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்ததால், சிறிது நேரத்திலேயே அவர்களும் சம்பவம் நடந்த கல்லூரிக்கு வந்தனர். அங்கு மாணவியின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த நிலையில், போலீசார் துரிதமாக செயல்பட்டு போராட்டத்தை நிறுத்தினர்.
இதற்கிடையே மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களிலும் திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க கல்லூரி முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…