Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஊர் கட்டுப்பாடு.. வைரல் வீடியோ.. பெரியார் பிறந்த நாளில் வெளியான தீண்டாமை பகீர்!!

Sekar September 17, 2022 & 17:29 [IST]
ஊர் கட்டுப்பாடு.. வைரல் வீடியோ.. பெரியார் பிறந்த நாளில் வெளியான தீண்டாமை பகீர்!!Representative Image.

சமூக நீதிக்காக போராடிய பெரியார் பிறந்த நாளில், ஊர் கட்டுப்பாடு எனக் கூறி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு மிட்டாய் கொடுக்காமல் திருப்பி அனுப்பிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடைக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் கிராமத்தில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள கடை ஒன்றில் மாணவர்கள் ஸ்னாக்ஸ் வாங்குவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில் கடைக்கு வந்த சிறுவர்களிடம், கடைக்காரர் , “இனி நீங்கள் இங்கு தின்பண்டம் வாங்க வேண்டாம். பள்ளிக்கூடத்துக்கு போங்க. இங்க தின்பண்டம் கொடுக்க மாட்டுறாங்கனு உங்க வீட்ல போய் சொல்லுங்க. இனி கொடுக்க மாட்டாங்கடா. ஊர்ல கட்டுப்பாடு போட்ருக்காங்க” என சொல்கிறார்.

உடனே, அதில் ஒரு சிறுவன் என்னக் கட்டுப்பாடுனு கேட்க, கடைக்காரர் உடனே, "கட்டுப்பாடுன்னா... ஊர்ல ஒரு கூட்டம் போட்டு பேசிருக்காங்க. அதுல உங்கத் தெருவுல இருக்குற யாருக்கும் பொருள் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லிருக்காங்க” என சொல்லி சிறுவர்களை அனுப்பியுள்ளார்.

இதை அந்தக் கடைக்காரரே வீடியோவும் எடுத்து, தன் சாதியினர் மட்டும் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளார். பின்னர் இது அங்கிருந்து பல வாட்ஸ்அப் குழுக்களுக்கும் பரவி விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம், ராமச்சந்திர மூர்த்தி என்பவரை கைது செய்ததோடு, கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்