புகைபிடிக்கும் பறவை என்று இப்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் பறவைப் பற்றி பார்ப்போம்.
நாம் தினமும் இயந்திர வாழ்க்கையில் பிஸியாக இருப்பதால் இந்த உலகத்தில் இருக்கும் சின்ன சின்ன அழகான விஷயங்களை பார்க்க முடியாமல் போகிறது. என்ன தான் நம்மால் நேரில் போய் பார்க்க முடியாது என்றாலும், இப்போது இருக்கும் டெக்னாலஜியால் இருக்கும் இடத்தில் இருந்தே பார்க்க முடிகிறது. சில நல்ல தாங்கள் பார்த்து ரசிக்கும் அழகான விஷயங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு அதை நாமும் பார்த்து ரசிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதில் ஒன்று தான் ஆனந்த் ரூபனகுடியின் தனது ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ.
அதில் பச்சை-நீல நிற தலை மற்றும் கழுத்துடன் இருக்கும் வெள்ளை பறவை பல முறை கத்திவிட்டு வாயிலிருந்து புகை மூட்டத்தை வெளியேற்றுவதைக் காட்டியது. அது மிக அழகாக இருப்பதால், பார்ப்பவர்களுக்கு என்ன அந்த பறவை தம் அடிச்சிட்டு புகையை வெளியே விடற மாறி தெரிகிறது. இதற்கு கமெண்ட் செய்தவர்கள் இந்த பறவையை வெற்று-தொண்டை பெல்பேர்ட்( Bare-throated bellbird) என்று அடையாளம் கண்டுள்ளனர். இது பிரதானமாக பிரேசிலில் காணப்படுவதாகவும், இதன் சத்தம் இறுதியில் மணி அடிப்பது போல் இருப்பதால் இந்த பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது.
நமக்கு வந்தா ரத்தம், அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? என்பது போல தான். செம்ம குளுர்ல குத்தியதால் அந்த பறவையின் வாயில் இருந்து சூடான காற்று வெளியேறுவதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…