மாணவிகளிடம் தற்கொலை எண்ணம் கூடவே கூடாது. சமீப கால நிகழ்வுகளால் நான் வேதனை அடைந்தேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள குரு நானக் கல்லூரியின் 50ம் ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர், கொரோனா தொற்றால் என் தொண்டை பாதிக்கப்பட்டுள்ளது. தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்பட கூடாது என்பதால், என் பணிகளை தொடர்கிறேன் என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், 'பள்ளியில் மாணவிகளுக்கு தொல்லை தந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எந்த சமரசமும் இல்லை. பள்ளியை வருமான நோக்கத்தோடு நடத்தாதீர்கள். மாணவ-மாணவிகள் எந்த பிரச்சனையாக இருந்தாலும் முதலில் ஆசிரியர், பெற்றோர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும், சமீப கால நிகழ்வுகளால் நான் வேதனை அடைந்தேன் என கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…