Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உளவு கப்பல் இலங்கைக்கு வரவேண்டாம் :- கை கொடுத்த இந்தியாவின் ராஜதந்திரம்..?

Bala August 06, 2022 & 17:55 [IST]
உளவு கப்பல் இலங்கைக்கு வரவேண்டாம் :- கை கொடுத்த இந்தியாவின் ராஜதந்திரம்..?Representative Image.

 சீன உளவு கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளியுறவு அமைச்சகம் கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது

இந்தியாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி சீனாவின்  கப்பல் இலங்கையின் துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதி வழங்கியுள்ளது. எரிபொருளை நிரப்புவதற்கும், உணவுப் பொருள்களை ஏற்றுவதற்கும் மட்டும் தான் அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை கூறியது. ஆனால் அந்தக் கப்பல் சாதாரண கப்பல் இல்லை என்றும்,  யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பல், கடல் சார் மற்றும் கடலோர பகுதிகளை ஆய்வு செய்யும் சக்தி வாய்ந்த உளவு கப்பல், இந்த கப்பல்கள் மூலம் சேட்டிலைட் கண்ணில் படாமல் ஏவுகணைகளை ஏவ முடியும், மேலும் இலங்கையை ஒட்டியுள்ள தமிழகத்தின் அணு நிலையங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்புள்ளது.

 பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு இந்திய பல உதவிகளைச் செய்த போதும், இந்தியாவை தரமசங்கடத்திற்குள்ளாக்கும் இந்த செயலுக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த உளவுக்கப்பல் தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், இது தொடர்பாக அதிருப்தியை இலங்கை அரசிடம் தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சகம்ம் தெரிவித்தது.

இந்த நிலையில்,  சீன உளவு கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளியுறவு அமைச்சகம் கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்