பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடி இலங்கையை ஆட்சி செய்த ராஜபக்சே குடும்பத்தினரின் தவறான பொருளாதார கொள்கையே காரணம் என கூறி வந்தனர். இதனையடுத்து அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே படஹ்வி விலகக்கோரி ஏராளமான பொதுமக்கள் அதிபர் மாளிகை அருகே போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததால் கோத்தபய ராஜபக்சே கப்பல் மூலம் வெளிநாடு தப்பிச்சென்றதாக தகவல்கள் வெளியாகின.
இதனைதொடர்ந்து நடைபெற்ற சபாநாயகர் தலைமையிலான கூட்டத்தில், அனைத்துக்கட்சி தலைவர்களும், அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகவும் வலியுறுத்தினர். பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அனைத்து கட்சி ஆட்சியை அமைப்பதற்கு வழிவகை செய்யத் தயாராக இருப்பதாகவும், ரணில் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…